வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் இன்று - டெனீஸ் மனுத்தாக்கல்
அமைச்சுப் பதவியிலிருந்த தன்னை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நீக்கியதை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே மனுத் தாக்கல் தன்னைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமை ச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பிரதி நிதிகளாக தெரிவாகியுள்ளனர்.
மூத்த சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோவின் நெறிப்படுத்தலில், சட்ட த்தரணி நிலந்தி டீ சில்வா மனுவைத் தாக்கல் செய்தார்.
தன்மீது எந்தக் குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையிலும் சட்டத்துக்குப் புறம்பாகப் பதவி நீக்கியிருப்பது தனது சட்டபூர்வமான எதிர்பார்ப்பைத் தகர்த்தெறிந்துள்ளது என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், தான் அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலையீடு, தடுத்தல் செயற்பாடுகளில் தலையிடக்கூடா வேண்டாமென தடை விதிக்குமாறு கோரியுள்ளார்.
முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் தன்னுடைய அமைச்சின் சார்பில் எந்தவோர் அமைச்சரும் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தடை விதிக்குமாறும் மனுவில் கோரி க்கை கோரியுள்ளார்.