தமிழ் மக்கள் தொடர்பில் சம்பந்தன் மீது குற்றச்சாட்டு – கஜேந்திரகுமார் !
மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உ ட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்கா ளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியி ன் தலைவர் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகம் ஒன்றின் நிக ழ்வில் கலந்து கருத்துத் தெரிவிக்கை யிலேயே குற்றம் சுமத்தியுள்ளார். தனது கட்சி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகித்திருக்கும் வேளை 2009ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரிய போது அத்தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதாக பெரும்பான்மையாக முடி வுரைக்கப்பட்டது. இதன்பின்னர், சட்டத்தரணி கனகேஸ்வரனின் வீட்டு நூல கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் (கூட்டமைப்பிற்குள் முதற் தடவையாக உள்வா ங்கப்பட்டவர்) செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிவித்த இரா.சம்பந்தன் ‘கொள்கைகளை வலியுறுத்த முடியாது, கட்சியில் இருப்ப தென்றால் இரும்.
இல்லாவிட்டால் போம்’ எனத் தெரிவித்தாகவும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தற்போது வெந்து போயிருக்கினம், அவர்களுக்கு கொள்கை அவசியமில்லையெனவும் தேர்தலே அவசியமென இரா.சம்பந்தன் ஆணித்த ரமாக குறிப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்தே தாம் கட்சியிலிருந்து விலகியதாகவும் தமிழ் அரசியலி லிருந்து தமிழ் தேசியத்தை நீக்கும் முகமாக அவர் மிகவும் சூட்சமமாக காய்க ளை செயற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் தற்போது சம்பந்தன், சுமந்திரனின் தந்திரங்களைப் புரிந்து கொண்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தன், சுமந்திரனால் செய ற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கு எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாது மௌனமாக உள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.