Breaking News

பிரித்தானிய ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் !

சிறிலங்காவிற்கு சுற்றுலாப் பயண மாகி இருந்த பிரித்தானியாவின் முன்னணி நாளிதழான பிரான்சியல் ரைம்சின், இளம் ஊடகவியலாளரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போல் மக்கிளீன் என்ற 25 வயதுடைய, ஒக்ஸே்போர்ட் பல்கலைக்கழக பட்ட தாரியான இவ் ஊடகவியலாளர், தனது தோழர்களுடன் சிறிலங்காவு க்கு சுற்றுலாவில் கலந்து அறுகம்குடாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். நேற்று மாலை 3.15 மணியளவில், கழிப்ப றைக்குச் செல்வதாக, நண்பர்களிடம் கூறி விட்டுச் சென்ற ஊடகவியலாளர் காணாமல் போயிருந்தார். 

அவர், அப்பகுதியில் உள்ள முதலைகள் அதிகம் நடமாடும் ஆனை மலை என்று கூறப்படும் நீரேரியில் கைகளைக் கழுவ முயன்ற போது முதலை இழுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. 

நீருக்குள் இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் அவர் தனது கைகளை உயர்த்தி உதவி கோரியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். 

அறுகம்குடா அருகே, ஆனை மலை நீரேரியில், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் கடற்கரையில் இருந்து ஒருவரை முதலை ஒன்று ஆற்றுக்குள் இழுத்துச் செல்வதை கண்டதாக உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

அவர் ஆற்றின் மறுபக்கத்தில் அப்போது இருந்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் உதவி கோரப்பட்டு, தேடுதல்கள் நடத்தப்பட்டன. எனினும், முதலை இழுத்துச் சென்ற ஊடகவியலாளரின் உடல் மீட்கப்படவில்லை. 

கடற்படை, இராணுவத்தின் துணையுடன் தேடுதல்கள் நடத்தப்பட்டாலும், ஆழமான, சேறு நிறைந்த நீரேரி என்பதால் உடலை மீட்பது கடினமெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

முதலைகள் ஆழமான சேற்றுக்குள் உடல்களை மறைத்து விடும் என்றும், எனவே நாளை வரை உடலைக் கண்டுபிடிப்பது சிரமம்மென தெரிவிக்கப்படுகின்றது.