தியாக தீபம் திலீபனின் நினைவில் - தமிழ்த்தேசிய கூட்டமைப்பு !
ஈழ மண்ணின் விடுவிற்காக எம்மி னத்தின் உரிமைக்காக தியாகி திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய அந்தப் புனித நாட்களில் யாழ் மண்ணில் திரைப்பட விழா நடாத்த ப்படவிருப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடு த்துள்ளது. உலகளாவிய ரீதியில் சினி மா இரசிகர்களாலும், சினிமா இயக்கு னர்கள் மற்றும் தயாரிப்பாளர்களா லும், திரைப்பட விழாக்கள் நிகழ்த்தப்படுகின்றன. திரைப்படங்களின் கலை ப்பெறுமதி மிக உயர்வாக உலக மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுகி ன்றது. அதன் பெறுமதியை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உணர்ந்து வரவே ற்கின்றது,
அதேவேளை, இலங்கைத்தீவில் கடந்த 7 தசாப்தங்களாக ஒடுக்க ப்படுகின்ற தமிழ்த் தேசிய இனம் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட அதி உச்ச தியாகங்களை அர்ப்பணித்து போராடியுள்ளது. இன்றும் போராடிக்கொ ண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசத்தின் இருப்பை மீட்பதற்கான போராட்டத்தில் எழுச்சியன் உச்ச காலமாக கடந்த 2009 மே வரையான சுமார் முப்பது வருடங்கள் விலை மதிப்பற்ற அளப்பரிய தியாகங்களுடன் எமைக் கடந்து சென்றுள்ளது.
ஈழ மக்கள் தம் விடுதலை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களை கட ந்தார்கள். அந்த மைல்கற்களில் ஒன்றாக, தியாக தீபம் திலீபனின் சாகும்வரை யிலான உண்ணாவிரத போராட்டம் வடிவம் மெழுகு வர்த்தியானது.
நல்லூர் வடக்கு வீதியில் 1987 புரட்டாதி 15ஆம் திகதி திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய தியாகப் பயணம் புரட்டாதி 26இல் தேசமே எழுச்சி கொள்ள, எம்மக்களையும் விட்டு தான் நேசித்த மண்ணில் விதையானார்.
எம் தியாகி உயிர் பிரிந்த நகரில், உண்ணாவிரம் இருந்த நாட்களில், (புரட்டாதி 15 தொடக்கம் புரட்டாதி 20 வரை) யாழ் திரைப்பட விழாவை கொண்டாடுதல், மக்களின் விடுதலைக்காக திலீபன் செய்த தியாகங்களை கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களின் தேசிய உணர்வை உதாசீனம் செய்து, எம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை இருட்டடிப்புக்கு முனைவதாகவும் உள்ளது.
தியாகி திலீபன் தமிழ் மக்களுக்காக தன்னுயிரை மெழுகாய் உருக்கிய நகரில், அதே நாட்களில் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாழ். சர்வதேச திரைப்படவிழாவை நடாத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது வருத்தத்தை தெரிவித்து நிற்கின்றது.
இவ் விழாவினை குறித்த நாட்களில் நடாத்துவதனை தவிர்த்துக் கொள்ளு மாறு ஏற்பாட்டுக்குழுவினரிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.