Breaking News

“எளிய“ புதிய அமைப்பை நகர்த்த திட்டம் கோத்தபாய ராஜபக்ஷ !

கடந்தகால பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தலை­மையில் “எளிய” (வெளிச்சம்) புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் சவா ல்கள் மற்றும் அச்­சு­றுத்தல் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமை ப்பின் முதல் சந்திப்பு நாளை பொர­லஸ்­க­மு­வையில் இடம்­பெ­ற­வுள்­ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பொது எதி­ர­ணியின் பலர் இந் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வேசம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் பரி­மாற்­ற­பட்டு வரும் நிலையில் “எளிய” எனும் பெயரில்  புதிய அமைப்­பொன்றை செயற்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்­வேறு அர­சியல் மற்றும் சிவில் பிர­மு­கர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை 6 ஆம் திகதி பொர­லஸ்­க­முவை பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

இது அவ­ரது அடுத்­த­கட்ட நகர்­வா­க அர­சி­யலில் தன்னை இணைத்­துக்­கொள்ளும் ஆரம்ப நகர்­வாகும் அமையுமென தெரி­விக்­கப்­ப­ட்டுள்ளது.  

அத­போன்று சகல இலங்கை பிர­ஜை­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பு­களை ஒளி­யேற்றும் நோக்­கத்தில் ஏற்­றப்­படும் தீபம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.