Breaking News

தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பை முன்னெடுக்க – ஐ நாவில் வைகோ!

தமிழர்களுக்கென தனித் தேசமொ ன்றை உருவாக்க உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் பொது வாக்கெ டுப்பு நடத்தவேண்டுமென மறுமல ர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை. கோபாலசாமி கண்ட னம் தெரிவித்துள்ளார்.  

ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரி மைக் கவுன்சிலின் 36-வது தொடரில், ‘தமிழர் உலகம்’ என்ற அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரை நிகழ்ந்தியபோது குறிப்பிடப்பட்டதாவது, வரலாற்றின் வைக றை காலம்  தொட்டு  ஈழத்தமிழர்கள் தான் இலங்கை தீவின் பூர்வீகக் வாழ் மக்கள். 

சிங்கள இனவாத அரசுகளின் ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் கொடூரமான படுகொலைக்கு, இன அழிப்புக்கு தள்ளப்பட்டவர்கள். 2009-ம் ஆண்டு இடம்பெ ற்ற போரில் தமிழர்கள் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டு குவிக்க ப்பட்டுள்ளார்கள். 

 இவற்றிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய இதே மனித உரிமைக் கவுன்சில் 2009 மே கடைசி வாரத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைக்கு பாராட்டு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்பது வேதனையின் ஆதங்கத்துடன் விவரித்து நிற்கின்றேன்.   

ஐ.நா. சபை 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமைத்த மார்சுகி தாருஸ்மென், ஸ்டீவன் ராட்னர், லாஸ்வின் சூகா ஆகிய மூவர் குழு, இலங்கையில் இட ம்பெற்றது ஈழத்தமிழ் இனப்படுகொலை என்பதற்ககான ஆணித்தரமான ஆதா ரங்களுடன் 2011 ஏப்ரல் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் பூர்வீகத் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான சிங்க ளவர்களை சிங்கள அரசு  குடியமர்த்துகிறது. காணாமல்போன தமிழர்களை தொடர்பான எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்கள் வாழும் இடமே கொடும் சிறைவாசம் ஆகிவிட்டது.

இருண்டு கிடக்கின்ற ஈழத்தமிழர் வானத்தில் தற்போது தோன்றியுள்ள ஒரே ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவென்றால், மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் சிங்கள ராணுவம் நடத்திய யுத்தக் குற்றங்களை உலகத்தில் எந்த நாடும் விசாரிக்கலாமெனக் கூறியத விடயமே.  

ஈழத்தமிழர்களின் தாயகத்திலும், உலகெங்கும் பரவி புலம்பெயர்வாழ் ஈழ த்தமிழர்களிடத்திலும் சுதந்திரமான தமிழ் ஈழதேசத்திற்கு பொதுவாக்கெடுப்பி ற்காக முன் நின்று செயற்படுவார்கள். 

இதற்கு முன் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் இருந்து சிங்கள ராணு வம் முற்றாக அகற்றப்படல் வேண்டும்.

சிங்கள குடியேற்றங்களை அகற்றப்படல் வேண்டும்.

தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.