Breaking News

வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் இயற்கை எய்தி விட்டார்!

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பிற்கும் மரியா தைக்குரியவருமான தமிழ்த் தேசிய உணர்வாளரும்தீவிர செயற்பாட்டாளரு மான வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள் நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தியுள்ளார். 

தமிழ் மக்கள் மீதும் தமிழீழ மண் மீதும் பற்றுடன் செயற்பட்டுவந்த பொன்.சத்தியநாதன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு தொடக்கம் உயிர் பிரி யும் நேரம் வரையில் எண்ணிலட ங்கா சேவைகளைச் செயலாற்றியு ள்ளார். விடுதலைப்புலிகளின் அமை ப்பிற்கான பல்வேறு தேவைகளில் முக்கிய பங்கெடுத்தவர் என்பது குறி ப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கணனி போன்ற இலத்திரனியல் பொருட்களை வழங்கி தொழி ல்நுட்ப ரீதியாக தமிழர்களின் வளர்ச்சியில் அளப்பரிய பங்களித்தவர்.  

அதேவேளையில், விடுதலைப்புலிகள் அமைப்பில் துறைசார்ந்த ஆர்வமான வர்களை அடையாளம் கண்டு அவர்களுடைய கல்விமேப்பாட்டிற்கான ஏற்பா டுகளையும் ஏற்படுத்திக்கொடுத்த பெருமைக்குரிய ஒருவரும் இவரே. 

பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராக வும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பங்காற்றி வந்தவர்.

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடி யாக செயற்பட்டு வந்த இவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பி க்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக வழிகாட்டிச் செயற்பட்டவர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகச்செயலாற்றி யுள்ளார்.

தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த இவர் அதனை உறுதி செய்வதற்கு முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். 

அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் இவரு ம்ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையறாது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பெரும் தொண்டாற்றிய உன்னத சேவையாளர் பொன்.சத்தியநாதன் அவர்களுக்கு எமது தளம் சார்பாக இரங்கலை தெரிவித்து ஒரு கணம் தலைசாய்த்து வணங்குகின்றோம். ஆத்ம சாந்திக்காக ஒம். தத் சத்.