Breaking News

தமிழர் வரலாற்றின் அழியாத அத்திவாரங்கள் !

குமரிக்கண்டத்தில் இருந்த தென் இந்தியாவின் பழங்குடிகள் பழந்தமிழ ர்கள் என்பது எண்கோள். சிலப்பதிகா ரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் அழி வுக்குள்ளானதாக கூறப்படுகின்றது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பி ருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது. தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, நாகதீவு ( தமிழீழம்) ஆகியவற்றில் வசித்த தமிழனின் பிறந்தகம். ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.

கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே,கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழனின் பிறந்தகம்.

 தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை ! 50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதல் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். 

கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம், தமிழ்ஈ ழம் என்னும் நாகதீவை ஆண்ட மனு வின் மகள் ஈழம் என்னும் தமிழ் அரச குமாரி ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள். என்ப தும் கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் ஒரு பகுதியே இன்றைய தமிழீழம், என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது. மனுசக்கரவர்த்திக்கு, சமன், எனும் புத்திரனும், ஈழம், எனும் புத்திரியும் அவதாரித்தார். மனுசக்கரவர்த்திக்கு பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. 

தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்தமனுசக்கரவர்த்தியின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனவாகியது.

இக் குமரிக் கண்டத்திலேயே தமிழ்நாடு, ஈழநாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என அழைக்கப்பட்டுக் காலக்கிர மத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே காணப்பட்டது. 

இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன. எனினும் ஈழமண்டலமாகிய ஈழத்தில் தமிழரே வாழ்ந்தனர்.

பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் ஈழத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.  

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்திலுள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந் நகரம் கன்னியாகுமரி என அழைக்கலானது.

இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராக இருந்தது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் ஆர்ப்பரித்தது. 

இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது, சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது.

மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் பல தேசங்களாக பிரிந்தது. கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று சோழப் பேரரசு சோழ நாடு கி.மு. 300கள்–கி.பி.1279 சோழர்களின் கொடி புலிக்கொடி. 

சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடி யிலும் பொறிக்கப்பட்டது. தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்ப டையாக விளங்கியது.  

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு, பின்புலத்தில் இருந்து  தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்துவோரும் தமிழர்  தான். 

தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் தான். 

இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950-களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 

1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இட ம்பெயர்ந்தனர். 

இப்படியாக இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். 

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடு கள், ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400,000 – 500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கி ன்றார்கள்.