Breaking News

கஞ்சா உற்பத்திக்கு முனைகின்றார் - அமைச்சர் ராஜித சேனாரத்ன

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இராணுவ வீரர்களினால் கஞ்சா வள ர்க்கும் செயற்பாட்டில் செயற்படவு ள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அவசியமான மூலிகை மருத்துவத்தி ற்கு முக்கிய மூலப்பொருளாக விள ங்கும் கஞ்சா மற்றும் அபின் என்ப வற்றை வேறு நாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள சிரமங்க ளின் அடிப்படையில், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொழு ம்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளார் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கை யில் தெரிவித்துள்ளார்.

 கஞ்சா மற்றும் அபின் என்பன எமது தேசிய மூலிகை வைத்தியத்தின் முக்கிய மூலப்பொருட்களாகும். நான் பொறுப்பேற்கும் போது, அபின் இல்லாமை யினால் பெருமளவிலான மூலிகை மருந்துகளை தயாரிக்க முடியவில்லை.  

அபின் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுவதால் சுமார் நான்கு வருட ங்களாக  கிடைக்கவில்லை. அதன்பின் நான் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, இந்திய மற்றும் இலங்கை இந்திய தூதரகங்களின் ஊடாக அதிக சிமரத்தின் மத்தியில் எமக்குத் தேவையான அபினை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளேன். 

அதேபோல் பொலிஸாரினால் கைப்பற்றபடுகின்ற கஞ்சா வழக்குகள் நிறைவடைந்து நான்கு வருடங்களின் பின் எங்களுக்கு கிடைப்பதால், அதிலு ள்ள மருத்துவ குணங்கள் அற்றுப்போகின்றன. 

இதனால் நாம், இராணுவத்தினரைப் பயன்படுத்தி கஞ்சாவை இலங்கை யிலேயே உற்பத்தி செய்வதாக தீர்மானித்துள்ளோம். எமது தேவைக்கு மாத்திரமன்றி வெளிநாடுகளின் தேவைக்கும் அதனை ஏற்றுமதி செய்ய முடியும். 

நாட்டில் யுத்தமில்லை. எனவே இராணுவத்தினரிடம் இதனை ஒப்படைத்து மிகவும் பாதுகாப்பான முறையில் பயிரிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், எமது பாராம்பரிய மருத்துவத்தை காப்பாற்றவும் செயற்பட ஆரம்பித்துள்ளோமெனத் தெரிவித்துள்ளார்.