Breaking News

பதவியிழந்த அருந்திக்க பெர்ணாண்டோ, ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்பு !

முன்னாள் மஹிந்த ராஜபக்சவினது விசுவாசியென்பதால் பதவி பறிக்கப்ப ட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அரு ந்திக்க பெர்ணாண்டோ நேற்றைய தி னம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபா லசிறிசேன கலந்து கொண்ட சம்பவ மொன்றில் கலந்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் தேசிய இளைஞர் சே வைகள் மற்றும் தொழிற்பயிற்சி அதி கார சபையினால் நிர்வகிக்கப்படும் ஒரு கொடவத்தை மோட்டார் வாகன பொறியியலாளர் கற்கை பீடத்திற்கான புதிய கட்டடத் திறப்பு விழா நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதீதியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறப்பித்து கட்டடத்தை திறந்துவைக்க, இளைஞர் சேவைகள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்த அருந்திக பெர்னாண்டோவும் கலந்துகொண்டிருந்தார்.

அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்புக்களுக்கு மதிப்பளிக்காது முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சார்பாக செயற்பட்டவர் என்ற குற்றம்சா ட்டப்பட்டு பதவி பறிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை அனைவ ருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருகொடவத்தை மோட்டார் வாகன பொறியியலாளர் கற்கை பீடத்திற்கான புதிய கட்டடம், ஜப்பானிய அரசின் 1540 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.