Breaking News

20ஆவது சட்டத்திருத்தத்தில் கைபோடவில்லையாம் அரசாங்கம் - தவராசா!

மாகாண சபை அதிகாரத்தில் அரசா ங்கம் கைபோடவில்லை. அரசியல மைப்பு மாற்றத்துடன் 20வது திருத்த த்தினை அரசாங்கம் கொண்டு வந்தி ருந்தால், விசேடமாக அமைந்திருக்கு மென வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குறி ப்பிட்டுள்ளார். 

20வது திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவியுள்ளதாக தொடர்பான சில விட யங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பத்திரிகையாளர்களை சந்தி த்துக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் அனைத்தினையும் ஒரே தினத்தில் நடாத்துவ தற்கான ஏற்பாடாகவே 20வது திருத்த சட்ட மூலம். அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள் ஏற்பாட்டினை பாராளுமன்றம் தீர்மா னிக்கும். 

தற்போது மாகாண சபைகளின் கடைசிக்காலம் எதுவோ அதுக்கு முதல் ஒரு திகதியை பாராளுமன்றம் தீர்மானிக்கும். அவ்வாறு பாராளுமன்றம் தீர்மா னிக்கும் பட்சத்தில் அந் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் மாகாணத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளவாறே செயற்படுவார்கள்.  

இறுதியாக கலைக்கப்படும் மாகாண சபைகளுக்கான கால முடிவில் தேர்தல் நடாத்தப்படும். ஒரு மாகாண சபை எப்போது ஏற்படுத்தப்படுகின்றதோ அதில் இருந்து 5 வருட காலத்திற்கு இருக்க வேண்டும்.

இது ஒன்று மட்டுமே 13 ஆம் திருத்த சட்டத்தினை தளப்பாது வைக்கும் ஒரு சட்டம். 20வது திருத்தச் சட்டம் எவ்வகையிலும் மாகாண சபையின் அதிகா ரங்களில் தலைபோடவில்லை. 

ஆளுநர் தலைபோடப் போகின்றார், பாராளுமன்றம் எடுக்கப் போகின்றது என்ப தெல்லாம் பிழையான கருத்துக்கள். ஆளுநரிடம் முதலமைச்சர் தாரை வார்த்துக்கொடுத்தால் மாத்திரம் தான் ஆளுநர் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆனால், 20வது திருத்தச் சட்டத்தில் அவ்வாறு ஒரு செயற்பாடும் இல்லை.

மக்கள் கருத்தறியும் குழுவில் மக்களினால் தெரிவிக்கப்பட்ட விடயம் சகல தேர்தல்களும் குறிப்பிட்ட ஓரே தினத்தில் நடாத்த வேண்டுமென்பதே. அர சியலமைப்பு மாற்றத்துடன் அரசாங்கம் இவற்றைக்கொண்டு வருமாக இரு ந்தால், செழுமைப்படுத்தப்பட்ட விடயமாகும். 

புதிய அரசியலமைப்பில் முழுமையாக கொண்டு வந்திருந்தால், 20வது திரு த்தம் விசேடமாக அமைந்திருக்கும். அவ் விடயத்தினை மட்டும் முன்னுரிமை படுத்திக் கொண்டு வருவதனால் பலராலும் எதிர்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.