Breaking News

நியூயோர்க்கில் ஐ.நா 72வது பொதுக் கலந்துரையாடலில் - ஜனாதிபதி

நியூயோர்க்கில் ஐ.நா தலைமையக த்தில் 72 ஆவது பொதுச்சபைக் கல ந்துரையாடல் தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நா ளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை தொடர நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செயற்படு த்தியுள்ளது. மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியி ட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
  “சிறிலங்கா அரசாங்கம் ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா அரசுத் தலைவர் மைத்திரி யின் ஐ.நா உரைக்கு எதிரான மக்கள் போராட்டமொன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. ஐ.நா பொதுச்சபையின் வருடாந்தக் பொதுக்கூட்டத்தில் பங்கெடுக்கும் சிறி லங்காவின் அரசுத் தலைவர், எதிர்வரும் 19ம் திகதியன்று உரை ஆற்றவுள்ளார். இந்நிலையில், மைத்திரின் உரை தொடர்ந்து கொண்டி ருக்கும் சமவேளை, சிறிலங்கா அரசினை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வகையில் மக்கள் போராட்டமொன்றினை நடாத்த நாடு கடந்த தமிழீழ அர சாங்கம் முனைந்துள்ளது. 

இப்போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திர குமாரன் அவர்கள் பங்கெடுத்து அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசு ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் அதன் குற்றங்களை பட்டியலிட தயா ராகியுள்ளார்.