மனித உரிமை ஆணையாளரின் நிபந்தனைக்கு மறுப்பு - இலங்கை அரசு
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் எனும் பெயரில் நாம் பூரண ஆதரவுகளையும் ஒத்துழைப்பு களையும் செயற்படுத்தி வருகின்றோ ம். தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே முழு மூச்சுடன் செயலாற்றுகின்றோம். ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆணையா ளரின் அவசரத்திற்கு எம்மால் எதனையும் செய்ய முடியாது. எமக்கு கால அவகாசம் தர வேண்டுமென உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாம் புறக்கணிக்கவில்லை. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை பெற்றுக்கொடுப்போமென தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹூசைன் நேற்று முன் தினம் இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது தொடர்பில் பேச்சைத் தொடுத்த போதே அமைச்சர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரியப்படுத்தியுள்ளார்.
யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் மக்கள் பெருமளவிலானோர் பாதிப்படை ந்துள்ளனர். இவர்களுக்கான உதவிகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரு கின்றது.
நாங்கள் எதிலும் குறை வைக்கவில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றச்சாட்டுகளை நியாயமற்றவையாகும்.
யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் அப்பகுதிகளுக்கு அதிகளவிலான உதவிகளை வழங்கியுள்ளோம்.
பல்வேறு விதமான அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். பல ஏக்கர் காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்துள்ளோம்.
எனவே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே முழு மூச்சுடன் இன்று இயங்கி வருகின்றோம்.
உற்சாகத்துடன் செயலாற்றுவதோடு முழுமையாக அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு எமக்கு கால அவகாசம் வேண்டும். வடக்கு பிரச்சினை சாதாரணமான விடயமல்ல. அதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படு கின்றன பொறுமையுடன் தீர்க்கலாமெனத் தெரிவித்துள்ளார்.