வாள் வெட்டு வவுனியா குருமன்காடு வீடொன்றில் - குடும்பஸ்தர் படுகாயம் !
வாள்களுடன் குழுவொன்று வவு னியா குருமன்காடு காளிகோவில் வீதியில் நேற்றிரவு வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் நேற்றிரவு 11மணியளவில் குரு மன்காடு காளிகோவில் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டிலி ருந்தவர்கள் மீது சரமாரியான தாக்கு தலை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் முற்றாக சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். வீட்டு உரிமையாளரான கண்ணா என்பவரை கண்மூடித்தனமான வெட்டில் காயமடைந்த குடும்பஸ்தர் வவு னியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு கின்றார்.
மேலும் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குழு என தெரியப்படுத்துகின்றனர். குடும்ப தகராறு ஒன்றிற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கூலிப்படைபோல் செயற்படும் குழு ஒன்றை வைத்தே வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளி யாகின.
அண்மையில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஆவா குழு என சந்தே கத்தில் வாளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும் இந்த குழுவினருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.