இன்று கொழும்பில் மைத்திரிபால - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
உருவாக்கத்தில் ஏற்பட்ட புதிய அரச மைப்பு தொடர்பாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சந்திப்ப தற்காக கேட்டுப் பல நாள்களாகி விட்டபோதும் அரச தலைவரைச் சந்திக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் ஊடாக கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தலைவர் இரா. சம்பந்தன் துரிதமாக கலந்துரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் அமர்ந் திருக்கும் போதே அரச தலைவருடன் இந்த விடயம் குறித்துப் பேசித் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்புத் திட்டமிட்டுள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அரசமைப்பு உருவாக்கப் பணியை விரைந்து முடிப்பதற்கு இடையூறாக இருக்கும் சகல முட்டுக்கட்டைகளையும் நீக்குவது தொடர்பாக ஆராய இருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ள னர்.
இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு மற்றும் 20ஆம் திருத்தம் தொடர்பில் மாத்திரமே பேசப்படும் காணி விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பின்னரான சந்தர்ப்பம் ஒன்றைப் பயன்படுத்தியே ஆராயப்படும்.
20ஆம் திருத்தச் சட்டவரைவு தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்துப் பேசுவதற்கு கடந்த வியாழக்கிழமை திட்டமிட்டிருந்தும் இறுதி நேரத்தில் அந்தச் சந்திப்பு தடைப்பட்டு இன்றைய தினம் சந்திப்பு நடைபெறவுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியினர், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைவு இன்னமும் சமர்பிக்கப்படாமல் இழுத்தடிப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வலுவான நிலைப்பாடுகளை எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.