Breaking News

இன்று கொழும்பில் மைத்­தி­ரிபால - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


உரு­வாக்கத்­தில் ஏற்­பட்­ட புதிய அரச மைப்பு தொடர்பாக அரச தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று சந்திப்ப தற்­காக கேட்டுப் பல நாள்­க­ளா­கி­ விட்­ட­போ­தும் அரச தலைவ­ரைச் சந்­திக்­கக் கிடைத்­தி­ருக்­கும் வாய்ப்­பின் ஊடாக கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை  தலைவர் இரா. சம்­பந்­தன் துரிதமாக கலந்துரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகிய இரு முக்­கிய கட்­சி­க­ளி­ன­தும் முக்­கிய பிர­தி­நி­தி­கள் மற்­றும் தலைவர்­கள் ஆகி­யோர் அமர்ந் தி­ருக்­கும் போதே அரச தலைவ­ரு­டன் இந்த விட­யம் குறித்­துப் பேசித் தீர்க்­க­மான ஒரு முடி­வுக்கு வரு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட் ட­மைப்­புத் திட்­ட­மிட்­டுள்­ளது. 

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்­வ­தற்­காக அனைத்­துக் கட்­சித் தலை­வர்­களை­யும் பிர­தி­நி­தி­க­ளை­யும் ஒருங்கிணைத்து இந்­தக் கூட்­டம் ஏற்பாடு செய்­யப்­பட்­ட­போ­தும் அரச­மைப்பு உரு­வாக்­கப் பணியை விரைந்து முடிப்­ப­தற்கு இடையூறாக இருக்கும் சகல முட்­டுக்­கட்­டை­க­ளை­யும் நீக்­கு­வது தொடர்­பாக ஆரா­ய இருப்பதாக கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் குறிப்பிட்டுள்ள னர். 

 இந்­தச் சந்­திப்­பில் புதிய அர­ச­மைப்பு மற்­றும் 20ஆம் திருத்­தம் தொடர்­பில் மாத்­தி­ரமே பேசப்­ப­டும் காணி விடு­விப்பு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சினை உள்­ளிட்ட ஏனைய விட­யங்­கள் பின்னரான சந்­தர்­ப்பம் ஒன்றைப் பயன்படுத்தியே  ஆரா­யப்­ப­டும். 

20ஆம் திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளை­யும் ஒருங்கிணைத்துப் பேசு­வ­தற்கு கடந்த வியா­ழக்­கி­ழமை திட்­ட­மிட்­டி­ருந்­தும் இறுதி நேரத்­தில் அந்­தச் சந்­திப்பு தடைப்பட்டு இன்­றைய தினம்  சந்­திப்பு  நடை­பெ­ற­வுள்­ளது. 

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர், அந்­தக் கட்­சி­யின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர், அந்­தக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் இன்­றைய கூட்­டத்­தில் கலந்துகொள்வார்கள்.

இந்த மாத இறு­திக்­குள் நாடா­ளு­மன்­றத்­துக்கு சமர்­பிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட இடைக்­கால வரைவு இன்­ன­மும் சமர்­பிக்­கப்­ப­டா­மல் இழுத்­த­டிப்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தனது வலுவான நிலைப்­பா­டு­க­ளை எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.