விஜயதாஸ ராஜபக்ஷவை பதவி நீக்கினார் ஜனாதிபதி
ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் நேற்று கோரிக்கை
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டுள்ள தாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அறிவித்த தையடுத்து. அமைச்சர் விஜ யதாஸவுக்கும் அறிவி த்துள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டு ள்ளது.
நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதி யிடம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவர் பதவி
அர சாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பொறுப்புக்களை மீறியுள்ளாரென்ற குற்றச்சாட்டை சுமத்தி அமைச்சுப் பதவிகளை நீக்கவென தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு செயற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் நேற்றுக் காலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சுப் பதவிகளை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனாதிபதி தனது தீர்மானத்தை தீர்க்கதரிசனமாக வெளியிட்டு ள்ளார்.