Breaking News

இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணமாகிறார் !

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர்­வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை பயண மாகிறார். மத்­திய ரயில்வே அமை ச்சர் ஸ்ரீ சுரேஷ்பாபு மற்றும் வெளி­வு­றவுச் செயலாளர் எஸ்.ஜெய்­சங்கர் உள்­ளிட்­ட­வர்கள் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான இலங்கை விஜ­யத்தில் இடம்­பெ­ற­வுள்­ளனர். இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு எதிர்­வரும் 31 ஆம் திகதி இலங்­கையில் ஆரம்­ப­மாக உள்­ளது.  இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்­கி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு இலங்கை வருவதாக தெரியவந்துள்ளது.

 இந்த விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ருடன் சிறப்பு சந்­திப்­பு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

 அதே போன்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி விக்­னேஸ்­வரன் ஆகி­யோரை கொழும்பில் சந்­திக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும்  சந்­திப்­புகள் உறு­திப்­ப­டுத்­தப்­படவில்லை.

 அதே போன்று மாநாட்டை மையப்­ப­டுத்­தி­ய­தாக இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவ­ராஜின் இலங்கை விஜயம் அமைந்­துள்­ள­மை­யினால் அனைத்து சந்­திப்­பு­களும் கொழும்­பி­லேயே இடம்­பெ­ற­வுள்­ளன.

 வருட இறு­தியில் கைச்­சாத்­திட உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள இலங்கை – இந்­திய தொழில்­நுட்ப மற்றும் பொரு­ளா­தார கூட்டு ஒப்­பந்தம் மற்றும் மத்­தல விமான நிலை­யத்தை கூட்டு முயற்­சி­யுடன் அபி­வி­ருத்தி செய்தல் உள்­ளிட்ட பல முக்­கிய விட­யங்கள் குறித்து அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்பின் போது இந்­திய குழு கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள உள்­ளது.

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்திய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு தொடர்ந்தும் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.