Breaking News

விஜேதாஸவை நீக்க : ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் கோரிக்கை

அமைச்சர் விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கைவிடுத்து ள்ளதாக ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­துள்­ளது. அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் அமைச்சர் கபீர் ஹாஸிம் ஒப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே குறித்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, அமைச்சர் விஜேதாஸ ராஜ­பக்ஷ அடிக்­கடி கட்­சி­யி­னதும் அமைச்­ச­ர­வை­யி­னதும் கூட்டுப் பொறுப்பை மீறிச் செயற்­ப­டு­வ­தாக, கடந்த 17 ஆம் திகதி ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூடி­ய­போது குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

எனவே குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்கு கடந்த 21 ஆம் திகதி வரையில் அமைச்சர் விஜேதாஸ ராஜ­ப­க்ஷ­விற்கு காலக்­கெடு வழங்­கு­வ­தாக செயற்­குழுக் கூட்­டத்தில் ஏக­மா­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

மேலும் அக்­கா­லக்­கெ­டுவில் குறித்த குற்றச் சாட்டை திருத்­திக்­கொள்ளும் வகையில் நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் அது தொடர்பில் விளக்­க­ம­ளிக்க வேண்டும். அல்­லா­வி­டத்து அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜப்­கஷ தமது அமைச்­ச­ரவை அமைச்­சி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­து­கொள்ள வேண்டும் எனவும் ஏக­மா­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு மலிக் சம­ர­விக்­ரம தலை­மையில் மூவ­ர­டங்­கிய குழு ஒன்றும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

எனவே மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி உரிய நட­வ­டிக்கை 

மேற்­கொள்­ளு­மாறு அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜப்­க­ஷ­விடம் வேண்­டுகோள் விடுக்ப்­பட்­ட­துடன் அவர் அதற்கு உடன்­பட்­டி­ருந்தார். 

எனினும் பின்னர் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ குறித்த உடன்­பாட்டை முறித்­துக்­கொண்­ட­துடன் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­ற­சாட்டை திருத்­திக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. 

மேலும் அவர் கடந்த வார இறு­தி­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்கள் மற்றும் அர­சாங்­கத்தின் கொள்­கைத்­திட்­டத்­ததை விமர்­சிக்கும் வகையில் செயற்­பட்­டி­ருந்தார். 

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ கட்சி செயற்­குழு முன்­னி­லையில் உடன்­பட்ட விட­யங்­களை நிறை­வேற்­ற­வில்லை. அத்­துடன் அவர் தொடர்ந்தும் அமைச்­சர்­க­ளையும் அர­சாங்­கத்தின் கொள்­கைத்­திட்­டங்­க­ளையும் விமர்­சித்­த­மை­யினால் அவர் செயற்­கு­ழுவின் தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்­டுள்­ள­தாக கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.

எனவே கட்சி செயற்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வகிக்கும் அமைச்சுப் பதிவியிலிருந்து அவரை நீக்கு வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியிடம் வேண்டிக்கொண்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.