Breaking News

வீட்டில் தந்தையின் இறுதிச் சடங்கு : பரீட்சைக்கு தோற்றிய சிறுமி..!

தரம் ஐந்தில் படிக்கும் மாணவி ஒரு வரின் செயற்பாடு அனைவரின் மன ங்களையும் கண்ணீர்க மல்க வைத்து விட்டது.  மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் இருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு எழுத பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் சுரியவெவ, விஹார கல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த மகளின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் நேற்று பரீட்சைக்கு தயாரான மகள் முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பின்னர் தந்தையின் சடலத்தை வணங்கி பரீட்சை எழுத செல்கிறேன் அப்பா எனக் கூறி கண்ணீருடன் மாணவி சென்றுள்ளார். 

மாணவியின் இந்த செயற்பாடு அங்கிருந்து அனைவருக்கும் வருத்ததை கொடுத்ததுடன், கண்ணீர் சிந்தவும் வைத்துள்ளது. நோயினால் பாதிக்க ப்பட்டிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.