கிளிநொச்சியில் பேரூந்து விபத்து: ஆறுபேர் காயம்.

விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரும் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தானது அதிக வேகத்தினாலோ, அல்லது சாரதி தூங்கியதனாலோ இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் அப்பகுதியில் மின்சாரம் தடை ப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த மின் கம்பங்களினதும், மின்மாற்றியினதும் பெறுமதி 25 இலட்சத்திற்கும் அதிகமாகும் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் அப்பகுதியில் மின்சாரம் தடை ப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த மின் கம்பங்களினதும், மின்மாற்றியினதும் பெறுமதி 25 இலட்சத்திற்கும் அதிகமாகும் என அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.