Breaking News

சிங்கப்பூராக மாறுமாம் இலங்கை - சீனா

சீனா இலங்­கையின் நலனிற்காக 

எதிர்­வரும் 15 ஆண்டு­க­ளுக்குள் இல ங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்ற வகை யில் சீனா செயற்­ப­ட்டுக்கொண்டிரு க்கின்றது. தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் தொடர்ந்தும் வழங்­குவதாகவும் இலங்­கைக்­கான சீன தூதுவர் யூ ஷியான்­லியாங் தெரி­வித்தார். சீன உதவி திட்­டத்தின் கீழ் ஆயிரம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பாட­சாலை உப­க­ர­ணங்­களை வழங்கும் நிகழ்வு தங்­கா­லையில் இடம் பெற்றபோது உரை­யாற்றும் போதே சீன தூதுவர் மேற்­கண்­ட­வாறு சிறப்புற வாக்களித்தாா்.

இலங்கை சீனாவின் மிகச் சிறப்­பான நண்­ப­ன் எனவும். இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்பு 70 ஆண்­டு­க­ளுக்கும் மேலான பழை­மை­யான உறவாகும்.

இரு நாடு­களின் நீண்­ட­கால உற­விற்கு கார­ண­மா­கிய இறப்பர்- அரிசி ஒப்­பந்­தத்தை இரண்டு நாடு­களின் மக்­களுக்கு தெரிந்த விடயம்.  இந்த நட்பின் அடை­யா­ள­மாக கடந்த பல ஆண்­டு­க­ளாக சீனா தனது அனைத்­து­லக உதவி திட்­டத்தில் அதி­கூ­டிய பங்கை இலங்­கைக்கு வழங்குகின்றது. 

இலங்­கையின் அபி­வி­ருத்தி மற்றும் இந்த மக்கள் மீது சீனா­விற்கு தனிப்­பட்ட அக்­க­றையும் பொறுப்பும் உள்­ளது. தற்­போ­தைய சூழலில் இலங்­கைக்கு அபி­வி­ருத்தி என்­பது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான விடயம். 

எனவே நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­துடன் மக்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும். இலங்­கையின் தென்­ப­கு­தியில் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆரம்­பிக்க சீனா ஒத்­து­ழைப்பு வழங்க உள்ளது. 

இளை­ஞர்­களின் தொழில்­நுட்ப ஆற்­றலை விருத்தி செய்தல் , மீன்­பிடி மற்றும் ஏனைய துறை­களில் தொழில்­நுட்ப வச­தி­களை அதி­க­ரித்தல் போன்ற விட­யங்­க­ளுக்கு சீனா உதவு உள்­ளது. சீன – இலங்கை நட்­பு­றவு சங்­கத்தின் மூலம், 1300 இலங்கை மாண­வர்­க­ளுக்கு சீனா புல­மைப்­ப­ரிசில் வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. 

எதிர்­கா­லத்தில் 2000 ஆக அதி­க­ரிக்­கப்­ப­தற்கு சீன அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இவ்­வாறு பல­வேறு திட்­டங்கள் தொடர்பில் சீனா மிகவும் ஈடுப்­பா­டுடன் செயற்­ப­ட்டு வருகின்றது. 

குறிப்­பாக தென்­ப­கு­தி மீன­வர்­க­ளுக்­கான வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தற்­கான திட்­டத்தை ஆரம்­பிக்­கவும் உத்­தே­சித்­துள்­ளது. சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று இலங்­கையின் தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா தொடர்ந்தும் தேவையான உதவிகளை வழங்கவுள்ளது. 

அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவ தற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்க . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனக் குறிப்பிட்டார்.