Breaking News

கல்வீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து!

கல்வீட்டுத் திட்டத்திற்கு விண்ண ப்பிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  அமைச்சினூடாக வடகிழக்கில் 50 ஆயிரம் கல்வீடு களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதினால்கல்வீடுகளை கோரி விண்ணப்பிக்கும்படி மக்களை கோரியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் அப்போதை ஆட்சியாளராக இருந்த மகிந்த ராஜபக்ஷவிடம், வடகிழக்கு மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்யுமாறு கோரியிருந்தோம். அதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கையை விரித்தது. 

ஆனால், நாம் இந்தியாவுக்குச் சென்று வீடு கட்டித் தருமாறு கோரியபோது இந்திய அரசாங்கம் 44ஆயிரம் கல்வீடுகளை அமைத்துத் தந்த பின்­ன­ரும் வடக்கு – கிழக்­கில் இன்னமும் வீட்­டுத் தேவை இருக்கின்றது.  

மீள்­கு­டி­யேற்ற அமைச்சு 65 ஆயி­ரம் பொருத்து வீடு­களை அமைத்­துத் தரு­வ­தா­கத் தெரி­வித்­த போது ஒரு பொருத்து வீட்­டுக்­கான செல­வில் 3 கல் வீடு­கள் அமைக்க முடி­யும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம்.  

பொருத்து வீட்­டுக்­கான செலவு குறைக்­கப்­பட்­டது. ஆனால் அந்­தப் பெறு­ம­தி­யில்­கூட இரண்டு வீடு­கள் கட்ட முடி­யும் என்­ப­தைத் தெரி­வித்து பொருத்து வீட்டை எதிர்த்து நின்றோம்.  

ஊழல் தொடர்பான பொருத்து வீட்டை மக்­கள் ஏற்காவிட்டால் வீடே கிடைக்­காது என்ற கருத்து வெளியிடப்­பட்­டது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில்­தான், வடக்கு – கிழக்­கில் 50 ஆயி­ரம் கல் வீடு அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தான அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது. 

எனவே மக்கள் பொருத்து வீட்டினைத் தவிர்த்து, கல்வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோருகின்றோம் எனக் கேட்டுள்ளார்.