Breaking News

இராசபுரத்தின் பெயரை மாற்றக் கூடாது – அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்


வவுனியா வடக்கு இராசபுரம் கிராமத்தின்
பெயர் எந்தக் காரணங்களுக்காகவும் மாற்றப்பட மாட்டாது என்று வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன. அந்தக் கிராமத்தின் பெயரை “லைக்கா கிராமம்’ எனப் பெயர் மாற்றி நடுகைக் கல் நடப்பட்டது.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் அந்த நடுகைக் கல்லை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இது தொடர்பில் நேற்று நடந்த பிரதேச செயலகக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் இராசபுரம் கிராமத்தின் பெயரை மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.