Breaking News

கடவுளை கும்பிடுங்கள் நல்ல தீர்வு கிட்டும்-கிளி மக்களிடம் சம்பந்தன்(காணொளி)

காணாமல்போனோரின் உறவினர்கள் 143 நாட்கள்
போராட்டம் செய்துகொண்டிருந்த நிலையிலும் பாராமுகமாக இருந்த சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நேற்று கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு சென்ற சம்பந்தன் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் காணாமல் போன உறவுகளை சந்தித்தித்தார். அங்கு உறவுகளின் கோரிக்கைகளை செவிமடுத்த சம்பந்தன் நான் ஜெனாதிபதி மற்றும் பிரதமருடன் சாதாரணமாக பேசவில்லை மிக கடுமையாக பேசிவருகிறேன் நீங்கள் கடவுளை வேண்டுங்கள் நல்லது நடக்கும் என வாக்களித்து சென்றுவிட்டார்.