Breaking News

கொல்லப்பட்ட இளைஞன் சிலதினங்களின் முன்பே வெளிநாட்டிலிருந்து வந்தார்; உறவினர்கள்!



நேற்றைய தினம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் பத்து நாட்களுக்கு முன்பே வெளி நாட்டிலிருந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவரல்லர் என்றும் குறிப்பிட்டுள்ள அவர்கள், நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உண்டுவிட்டு வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சட்டவிரோத மணல் ஏற்றிவந்தபோது தாம் வழிமறித்தும் நிற்காத காரணத்தாலேயே சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.