Breaking News

தீர்வின்றி தொடரும் போராட்டம்..!!



கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம், இன்றுடன் 130 ஆவது நாளை எட்டியுள்ளது.

கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள உறவுகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதும் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவவொரு தீர்வும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது புாராட்டம் தொடர்பில் உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.