Breaking News

முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார் யாழ். படைகளின் தலைமையக தளபதி



யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு நேற்று வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்.படைகளின் தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி கடந்த ஏப்ரல் 30ஆம் நாள் பொறுப்பேற்றார்.

அதையடுத்து, யாழ். படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள 51ஆவது, 52 ஆவது, 55 ஆவது டிவிசன்களின் தலைமையகங்களுக்கும், யாழ். படைகளின் தலைமையக முன்னரங்க பராமரிப்பு பிரதேச தலைமையகத்துக்கும் சென்று படை அதிகாரிகளையும், படையினரையும் அவர் சந்தித்தார்.

இதையடுத்து. நேற்று வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.