Breaking News

முதலமைச்சரின் புத்தாண்டு செய்தி(காணொளி)

கேள்விக்குறியாகியுள்ள தமிழ் மக்களின் நிலையை
சீர்செய்து, தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தை படைக்க அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை (வெள்ளிக்கிழமை) பிறக்கவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வருடங்கள் பல கடந்து சென்றாலும், தமிழ் மக்களின் நிலை மட்டும் என்றுமே கேள்விக்குறியாகவே உள்ளது. உறவுகளைத் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், வீடுகள் நிலங்களை இழந்தவர்களின் சோகக் கதைகள், வேலையற்ற பட்டதாரிகளின் ஏக்கப் பெருமூச்சு என இன்னோரன்ன துன்பங்களுக்கு மத்தியில் நாளைய புத்தாண்டு பிறக்கவுள்ளது.



பிறக்கவிருக்கும் இப்புத்தாண்டில் எமது துன்ப துயரங்கள் எம்மைவிட்டு அகலவும் சிறையில் அடைக்கப்பட்ட எமது இளைஞர்கள் தமது உறவுகளுடன் இணைந்து கொள்ளவும் மீனவர்களின் தொழில் முயற்சிகள் மேம்படவும் இப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இப்புத்தாண்டை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்