Breaking News

தடுமாறும் தமிழ் தலைமைகளால் தமிழ் மக்கள் தளர்வடைகின்றனரா?: வவுனியாவில் கருத்து பகிர்வு

‘தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன?’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் எதிர்வரும் 22ஆம் திகதி கருத்துப் பகிர்வொன்று இடம்பெறவுள்ளது.


தமிழ் மக்களின் மத்தியில் நலிவடைந்துவரும் தமிழ் தேசியவாதத்தை நிலைநிறுத்த வேண்டிய தார்மிக கடமையில் இருந்து தலைமைகள் நிலை தவறுவதாக எழும் வாதத்தை அடிப்படையாகக்கொண்டே குறித்த கருத்து பகிர்வு இடம்பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வானது, அரசியல் தலைமைகள், மதக்குருக்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.