Breaking News

25 வீட்டுத்திட்ட காணியை கடற்படைக்கு வழங்கும் நடவடிக்கை முறியடிப்பு (படங்கள்)


மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராம மக்களின் காணிகளில் கடந்த பல வருடங்களாக முகாம் அமைந்துள்ள கடற்படையினருக்கு குறித்த வீட்டுத்திட்டத்தில் உள்ள காணிகளை நில அளவை செய்து மீண்டும் கடற்படையினருக்கு சொந்தமாக வழங்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ . குணசீலனின் தலையீட்டினால் நேற்று புதன்கிழமை கைவிடப்பட்டுள்ளது.