Breaking News

எதற்­காக இரு­த­ரப்பி­ன­ருக்­கி­டை­யே புதி­தாக பேச்­சு­வார்த்­தைகள் : வாசு­தேவ



இலங்­கையின் ஒற்­றை­யாட்­சியை கைவி­டு­வது தொடர்பில் அர­சாங்கமும் தமிழ்த் தேசிய்க கூட்­ட­மைப்பும் இண­கக்­கப்­பாட்டை ஏற்­ப­­டுத்திக் கொண்­டுள்ள நிலையில் எதற்­காக இரு­த­ரப்பி­ன­ருக்­கி­டை­யே புதி­தாக பேச்­சு­வார்த்­தைகள் எனக் கேள்வியெழுப்பும் மஹிந்த ஆத­ரவு எம்.பி. வாசு­தேவ நாண­யக்­கார,

இந்­தி­யாவை மீறி புலம்பெயர் அமைப்­புக்­களின் தேவையை நிறை­வேற்ற கூட்­ட­மைப்பு முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்­டியுள்ளார்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மைத்­தி­ரி­பால சிறி­­­சே­ன­வுடன் ரணில் விக்­கி­ர­மசிங்கவு­­டனும் இர­க­சி­ய­மான பேச்­சு­வார்த்­தை­களை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு நடத்­தி­யது. இதற்­கா­கவே இன்று அர­சாங்­கத்­திற்கு சம்­பந்தன் ஆத­ரவு வழங்­­கு­கின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.