Breaking News

ஜனாதிபதிக்கு சீனா விஷேட அழைப்பு

இரு­நாட்டு உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­க தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போதே அவ­ர் மேற்­கண்­­ட­வாறு தெரி­வித்­தார்.

எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து சீனாவுடனான பொருளாதார உறவும், அரசியல் உறவும் முற்றாக பாதிப்பட்டுள்ளதாக எதிர் தரப்பினர் பல விமர்சங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

மேலும் எமது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 25 வீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு செலவாகின்றது. இந்த நிலை நீடிக்காதிருக்க தற்போது எமக்கு கிடைத்துள்ள சீனா உள்ளிட்ட நாடுகளின் உறவை வலுப்படுத்திக்கொள்வதே சிறந்தது என்றார்.