Breaking News

யாழில் நிரந்தரமாக்கப்படும் இராணுவ முகாம்

வலி.கிழக்கு வசா­விளான்–ஒட்­ட­கப்­புலம் பகு­தியில் நிரந்­த­ர­மாக்­கப்­பட்­டு­வரும் இரா­ணுவ முகா­மினால் அப்­ப­குதி வாழ் மக்கள் அச்­சத்தின் மத்­தியில் வாழ்ந்து வரு­கின்­றனர். 

வசா­விளான் – ஒட்­ட­கப்­புலம் மற்றும் அதனை அண்­டிய பகு­தியும் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாத­ம­ளவில் பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பட்­டன. எனினும் ஒட்­ட­கப்­புலம் பகுதி முழு­மை­யாக இரா­ணு­வத்­தின்­வ­சமே இருந்து வரு­கின்­றது.

ஒட்­ட­கப்­பு­லத்தில் அமைந்­துள்ள மாதா கோவி­லுக்கு மட்டும் மக்கள் சென்­று­வர அனு­ம­தி­ய­ளித்த படை­யினர் குறித்த பகு­தியில் உள்ள இரா­ணுவ முகாமை நிரந்­த­ர­மாக அமைக்கும் பணியில் தற்­போது ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­ட­போது இடம்­பெ­யர்ந்த மக்கள் 6 மாத காலத்­துக்குள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என அறி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் அப்­ப­கு­தி­களில் இரா­ணுவ முகாம் நிரந்­த­ர­மாக அமைக்­கப்­படும் செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இதே­வேளை மீள் குடி­யேற்­றத்­திற்கு அனு­ம­திக்­கப்­பட்ட இடங்­களை அண்­மித்த பகு­தி­களில் காணப்­படும் இரா­ணு­வத்தின் தற்­கா­லிக படை முகாம்கள் நிரந்­த­ர­மாக்­கப்­பட்டு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டும் வரு­கின்­றன. இதனால் இரா­ணு­வத்தின் வச­முள்ள பொது மக்­க­ளது ஏனைய நிலங்கள் விடு­விக்­கப்­ப­டுமா என்ற ஏக்கம் காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்­ளது.

வசா­விளான் ஒட்­ட­கப்­பு­லத்­தி­லுள்ள முறிவு நெறிவு வைத்­தி­ய­சாலை அமைந்­துள்ள காணிக்கு அரு­கா­மை­யி­லுள்ள இரா­ணுவ முகாமே பாரிய கொங்­கிறீட் வளை­வு­க­ளுடன் சீமெந்­தினால் கட்­டப்­பட்டு பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதனால் அப்­ப­குதி மக்கள் பெரும் அச்­சத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

குறித்த பகு­தியில் ஒட்­ட­கப்­புலம் பாடசாலை, ஒட்­ட­கப்­புலம் முறிவு நெறிவு வைத்தியசாலை, ஒட்டகப்புலம் தேவாலயம் என்பன அமைந்துள்ளன. அத்துடன் இவற்றுக்கு அருகில் பொதுமக்கள் மீள் குடியேற ஆரம்பித்துள்ள நிலையில், தமக்கான வீடுகளினையும் நிர்­மா­ணிக்க ஆரம் பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.