தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் ஊடகத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதே இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் ஊடகத்துறை பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் கடந்த மார்ச் மாதத்தில் முதலாவது வாசிப்புக்காக இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும் குறித்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.