யாழில் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி ரயிலில் முன் பாய்ந்து இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடையில் (இராமாகோயிலடியில்) நேற்று முன்னிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி சாவகச்சேரி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் சடலம் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.