Breaking News

ஏட்­டிக்குப் போட்­டி­யாக செய்ட் அல் ஹுசேனை சந்­திக்­க­வுள்ள அர­சாங்க, கூட்­ட­மைப்பு தரப்­பினர்



ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 13 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில், கூட்டத் தொடரில் அர­சாங்­கத்தின் சார்­பிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பிலும் கலந்­து­கொள்­ள­வுள்ள பிர­தி­நி­திகள், மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனை சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

இரண்டு தரப்­பி­ன­ருமே ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்­பி­லேயே செய்ட் அல் ஹுசே­னுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர். குறிப்­பாக அர­சாங்க தரப்­பினர் தாம் சிறந்த முறையில் ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தி­வ­ரு­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் தெரி­விக்­க­வுள்­ளனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்பில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு அதி­ருப்­தியை வெளிக்­காட்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் 13 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள 32 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் மற்றும் இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். ஜூன் மாதம் 29 ஆம் திகதி இலங்கை தொடர்­பான வாய்­மூல அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசெ­னினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து முன்­னெ­டுக்­கப்­படும் உள்­ளக விசா­ர­ணையில் எக்­கா­ரணம் கொண்டும் வெ ளிநாட்டு நீதி­ப­திகள் உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும் உள்­நாட்டு நீதி­ப­தி­களை கொண்டே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் எனவும் பிர­தமர் அறி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன் சர்­வ­தேச நீதி­ப­தி­களை எக்­கா­ரணம் கொண்டும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் இணைத்­துக்­கொள்­ள­மாட்டோம் என்றும் உள்­ளக நீதி­ப­தி­க­ளைக்­கொண்டு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் மிகவும் வலு­வான முறையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்­த­வ­கையில் அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடு வெளி­வி­வ­கார அமைச்­ச­ரினால் ஜெனி­வாவில் முன்­வைக்­கப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

செய்ட் அல் ஹுசேன் இல­ங­கைக்கு விஜயம் செய்­தி­ருந்­த­போது வெளி­நாட்டு நீதி­ப­திகள் தொடர்பில் முடி­வெ­டுப்­பது இலங்­கை­யி­னு­டைய தீர்­மா­ன­மாகும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். கடந்த பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த செயிட் அல் ஹுசைன் கடந்த மார்ச் மாதம் வெளி­யிட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை விஜயம் குறித்தும் அவரின் மதிப்பீடு தொடர்பிலும் வாய்மூல அறிக்கையில் விடயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது