வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்டம் – சம்பந்தனிடம் கையளிக்க நடவடிக்கை
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்காக வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட உபகுழு, தமது அறிக்கையை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கவுள்ளனர்.
குறித்த குழு நேற்று மூன்றாவது முறையாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கூடிய இருந்தது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், இந்த உபகுழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 7ஆம் திகதி வடமாகாண சபையில் முன்வைக்கப்படும். பின்னர் அது எதிர்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்