Breaking News

தெற்காசியாவின் உயரமான புத்தர் சிலை இலங்கையில் – திறந்து வைக்கிறார் மைத்திரி

தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, மத்துகமவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும், ஏப்ரல் 23ஆம் திகதி- சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

மத்துகமவில் உள்ள பட்டமுல்ல கந்த அனைத்துலக பௌத்த நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தர் சிலை, 135 அடி உயரமானது. சுமார் 90 மில்லியன் ரூபா செலவில், மத்துகம தொகுதி ஐதேக அமைப்பாளர், ஜெகத் பின்னகொடவிதானவினால் இந்தப் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரவில் உள்ள பழைமை வாய்ந்த அவுகண புத்தர் சிலையைப் போன்று இந்த புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த புத்தர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வண.மாதுளுவாவே சோபித தேரரின் சிலையையும் சிறிலங்கா அதிபர் திறந்து வைக்கவுள்ளார்.