Breaking News

உள்ளக விசாரணைக்கும் சர்வதேச உதவி தேவை

இலங்கை உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­களை கையாண்­டாலும் எமக்கு சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­கின்­றது. சர்­வ­தே­சத்தை இணைத்­துக்­கொண்டு இலங்­கையின் சிக்­கல்­களை மாற்­றி­ய­மைப்­பதே சாத­க­மான வகையில் அமையும். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் விஜயம் இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகை­யி­லேயே அமை­யு­மென நம்­பு­வ­தாக அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள நடவடிக்­கைகள் தொடர் பில் உண்மை நிலை­மைகளை வெளிப்­ப­டுத்­தா­விடின் எமது அடுத்­த­கட்ட நகர்­வுகள் மிகவும் கடி­ன­மா­ன­தாக அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்­கான விஜயம் மேற்­கொண்­டுள்ள நிலையில் நேற்றுமுன்­தினம் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் தமிழ், முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்­துள்­ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்­போதே அவர் மேற்­கண்­ட வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளமை இலங்­கையின் இப்­போ­தைய நிலையில் மிகவும் ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமைந்­துள்­ளது என்றே கரு­து­கின்றோம். அவரின் வரு­கையை இலங்கை அர­சாங்கம் வர­வேற்­கின்­றது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள நட­வடிக்­கைகள் தொடர்பில் உண்மை நிலை­மைகளை வெளிப்­ப­டுத்­தா­விடின் எமது அடுத்­த­கட்ட நகர்­வுகள் மிகவும் கடி­ன­மா­ன­தாக அமையும். எனவே இப்­போது இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரி­லேயே அவர் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ள­தா­னது நல்­ல­தொரு செயற்­பா­டாக அமைந்­துள்­ளது.

அதேபோல் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் தனது ஒரு­ வ­ருட கால எல்­லையில் எவ்­வா­றான நகர்வு ­களை ஜன­நா­யக ரீதியில் முன்­னெ­டுத்­துள்­ளது? வடக்கு, கிழக்கில் எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பதை அவர் நேர­டி­யாக பார்­வை­யிட்­டுள்­ள­மையை நல்­ல­தொரு விட­ய­மா­கவே கரு­து­கிறோம்.

அதேபோல் வடக்கு, கிழக்­குக்கு அவர் நேற்று விஜயம் மேற்­கொண்டு பொது­மக்­க­ளையும் சிவில் அமைப்­பு­க­ளையும் மற்றும் தமிழ், முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்­துள்ளார். இன்றும் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் சிவில் அமைப்­புகள், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை சந்­திப்பார். ஆகவே நாட்டில் பல­த­ரப்­பட்ட சமூக பிர­தி­நி­தி­க­ளையும் அவர் சந்­தித்து பூர­ண­மான தெளி­வு­டனேயே இலங்­கையில் இருந்து அவர் பய­ணிப்பார். ஆகவே இந்த விஜ­யத்தின் போது தற்­போ­தைய நல்­லாட்­சியின் நிலை­மை­களை அவரால் உணர முடியும் என நாம் நம்­பு­கிறோம்.

எனினும் இப்­போது அவ­ரது வரு­கை­யா­னது இலங்­கையின் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையை தவிர்த்து சர்­வ­தேச விசா­ர­ணையை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் என நாம் நம்­ப­வில்லை. மாறாக இலங்­கையின் செயற்­பா­டு­களில் சர்­வ­தேச ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் வகையில் தனது ஒத்­து­ழைப்­பு­களை வழங்­குவார் என நாம் நம்­பு­கின்றோம். இலங்கை உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­களை கையாண்­டாலும் எமக்கு சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­கின்­றது. சர்­வ­தே­சத்தை இணைத்­துக்­கொண்டு இலங்­கையின் சிக்­கல்­களை மாற்­றி­ய­மைப்­பதே சாத­க­மான வகையில் அமையும்.

கேள்வி:- காணா­மல்­போனோர் மற்றும் கடத்­தப்பட் டோர் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்­தப்­பட்­டுள் ­ளது. அதே போல் நில அப­க­ரிப்பு மற்றும் இராணுவ ஆக்­கி­ர­மிப்­புகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரி­வித் ­துள்­ளனர். இந்­த­வி­ட­யங்­களில் சர்­வ­தேசம் தொடர்ந் தும் அழுத்தம் கொடுக்கும் நிலைமை உள்­ளதே?

பதில்:- ஆம், மக்கள் இந்த விட­யங்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். காணா­மல்­போனோர் மற் றும் மக்­களின் நில அப­க­ரிப்பு தொடர்பில் அவர் கள் குறிப்­பிட்­டாலும் காணி­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் அனைத்­துக்­கட்ட நட­வடிக்­கை­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது. வடக்­கிலும், கிழக்­கிலும் பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் நாம் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். ஆனால் காணா­மல்­போனோர் தொடர்பில் எமது நட­வடிக்­கை­களில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என்­பது உண்­மை­யே­யாகும். எனினும் நாம் பின்­னிற்­க­வில்லை. உள்ளகப் பொறிமுறைகள் மூலமாக வெகுவிரைவில் பிரச்சி னைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும்.

கேள்வி:- இந்த விஜயம் அரசாங்கத்தை எந்த வகையிலேனும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும் வகை யில் அமையுமா?

பதில்:- அவ்வாறு அமையாது, கடந்த ஆட்சியைப் போல் சர்வதேசம் எம்முடன் முரண்பட்டு செயற்பட வில்லை. மாறாக இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் சரியான வகையில் இனங்கண்டு செயற்படுகின்றது.