ஜெனிவா மனித உரிமைகள் தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு எதிராக வழக்கு
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் இலங்கை தொடர்பிலான தீர்மானத்தில் கையெழுத்திட்ட வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அனைவருக்கும் எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசத் துரோக குற்றச் சாட்டின் கீழ் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.
கோட்ட ஸ்ரீ சம்புத்தாலோக்க விகாரையில் நேற்று நடைபெற்ற இராணுவத்தினரை காப்பதற்கான கையெழுத்து வேட்டை நிகழ்ச்சிகளில் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே பெங்கமுவே நாலக தேரர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேசத்தின் தேவைக்காக அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மங்கள சமரவீர கையெழுத்திட்டதாக இதன் போது குறிப்பிட்ட நாலகதேரர், அதன் அடிப்படையிலேயே இராணுவத்தினர் சிறைகளில் அடைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
'அமெரிக்காவின் தேவைகளுக்காக செயற்படும் இந்த அரசாங்கம் தேசத் துரோக அரசாங்கமாகும். அதனை நான் பயமின்றி கூறுவேன். இன்று மைத்திரிபாலவும் ரணி லும் இராணுவ வீரர்கள் செய்த தியாகத்தினாலேயே உயிருடன் உள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
மஹிந்த ராஜபக் ஷ பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரு தேசிய தலைவர். இன்று அவருடன் இருந்த அவருக்கு உதவிய அனைவரும் பழிவாங்கப்படுகின்றனர். இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவத்தினர் தவறிழைத்திருந்தால் அவர்களை மன்னிக்கலாம். ஏனெனில் அவர்கள் செய்த தியாகம் முக்கியமானது.
அமெரிக்காவினதும் இந்தியாவினதும் சந்தோஷத்துக்காக இராணுவத்தினரை சர்வதேசம் மன்றில் நிறுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் சர்வதேச புலம் பெயர் புலிகளின் கரங்கள் இல்லாமலில்லை. அதனால் அதனையும் முறியடிக்க நாம் தற்போது புதிய அமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம். உலக இலங்கையர் அமைப்பு என்ற பெயரி லேயே அந்த அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கின்றது. புலம் பெயர் இலங்கை யர்கள் அதில் அங்கம் வகிக்கலாம். இது புலிகளின் புலம் பெயர் அமைப்பை விட சக்தி வாய்ந்தது. என்றார்.
இலங்கை கடற்பரப்பில் இயந்திர இழுவைப்படகுகளின் செயற்பாடுளை தடைசெய்யும் சட்டமூலம் மீதான விவாதம் சபையில் நாளை நடைபெறவுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனால் சமர் ப்பிக்கப்பட்ட இந்த சட்ட மூலம் நாளை பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
இந்த சட்ட மூலமானது 1996ஆம் ஆண் டின் 2ஆம் இலக்கம் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் சட்டத்தில் திருத்தங்களை வலியுறுத்தி நிற்கின்றது.சட்ட மூலமானது நிறைவேற்றப்படுகின்ற போது உலகிலே இந்த நடவடிக்கை யை சிலி நாட்டைத் தொடர்ந்து தடை செய்கின்ற இரண்டாவது நாடாக இலங்கை காணப்படும்.
அத்துடன் இலங்கை கடற்பரப்பில் இழு வை நடவடிக்கைகளை தடை செய்வதை சட்டமூலம் வலியுறுத்துவதுடன் இழுவை நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருதல், இலங்கை கடற்பரப்புகளில் இழுவை நோக்கங்களுக்காக இழுவை வலைகளை வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், இறக்குமதி செய்தல் போன்றவற்றை தடை செய்தல், நியமங்களை மீறி இழுவை நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெளிவாக குறிப்பிடுதல் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. கூறுகையில்
வெளிநாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவர்கள், முக்கியமாக வடக்கு மீனவர்கள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள், இதை தடுப்பதற்கான நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம், இதில் ஒரு படியாகவே இந்த சட்ட மூலமானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இழுவை நடவடிக்கையால் மிகவும் இலகுவில் அழியக்கூடிய கடல் வளங்களான அருகிவரும் கடல் உயிரினங்களும் பவளப் பாறைகளும் ஒரு சில விநாடிகளில் அழிக்கப்படுகின்றன. இந்த காரணிகளுக்காகவே 2015ஆம் ஆண்டு முதல் தடவையாக உலகில் சிலி நாடானது தனது கடல் எல்லையில் இந்த நடவடிக்கையை முற்றாக தடை செய்தது.
இந்தோனேசியா, நியூஸிலாந்து, பெலிஸ், மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது கடல் எல்லைகளில் இழுவை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி உள்ளது. அதைப்போலவே இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த பாரிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக மீன் பிடிப்பதற்கு வருடாந்த தடை நடைமுறைகளை கையாண்டு வருகின்றன.
எனவே, இந்த சட்டமானது நடைமுறைப் படுத்தபடுகின்ற சந்தர்ப்பத்தில் ஆழ்கடல் இழுவையானது தடை செய்யப்படுவதுடன் அது ஒரு குற்றமாக கொள்ளப்படும். குற்ற வாளியாக காணப்படுபவர் இரண்டு வருட சிறைத் தண்டனையை பெறுவதோடு ரூபா 50,000 தண்டப் பணமாக செலுத்த வேண் டிய நிலை ஏற்படும் என்றார்.