Breaking News

அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஆராயும் வடமாகாண குழு கூடுகிறது



இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­பிற்­கான முன்மொழி­வு­களை வழங்­கு­வ­தற்­கான வட­மா­கா­ண­ச­பையின் 19 பேர் கொண்ட குழுவின் 2ஆம் அமர்வு 26ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக மேற்­படி குழுவின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வரும், மாகா­ண­சபை அவைத் தலை­வ­ரு­மான சீ.வி.கே.சிவ­ஞானம் தெரி­வித்­துள்ளார்.

குறித்த விடயம் தொடர்­பாக மேலும் அவர் தெரி­விக்­கையில், கடந்த மாதம் 26ஆம் திகதி மாகா­ண­ச­பையின் 44ஆவது அமர்வில் இலங்கை அர­சாங்கம் மேற்­கொள்ளும் அர­சி­ய­லமைப்பு மறு­சீ­ர­மைப்பில் தமிழ் மக்கள் நலன்­சார்ந்த வட­மா­கா­ண­ச­பையின் முன்­மொ­ழி­வு­களை வழங்­கு­வ­தற்­கான 19 பேர் கொண்ட குழு உரு­வாக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மேற்­படி குழு கடந்த 1ஆம் திகதி தமது 1ஆவது அமர்வை முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்தில் நடத்­தி­யி­ருந்­தது. இதன்­போது வட­கி­ழக்கு மாகா­ணங்­களை தாய­க­மாக கொண்ட தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால வர­லாற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வா­றான தீர்வு தேவை என்­பதை வட­மா­கா­ண­சபை வலி­யு­றுத்தும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், வட­கி­ழக்கு தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தி எடுப்­ப­தற்­கான பொறுப்பை வட­மா­காண கல்­வி­ய­மைச்­ச­ருக்கு கொடுத்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் எமது 19 பேர் கொண்ட குழு 2ஆம் அமர்வை நாளை 26ஆம் திகதி நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் வட­கி­ழக்கு மாகா­ணங்­களை தாய­க­மாக கொண்ட தமிழ் மக்­க­ளு­டைய வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தும் பொறுப்பை எடுத்­தி­ருந்த கல்வி அமைச்சர் அதனை இந்த அமர்வில் சமர்­ப்பிப்பார் என நம்­பு­கிறோம். மேலும் எமது பணிகள் துரி­த­மாக முன்­னெ­டுக்க நாம் தீர்­மா­னித்­துள்­ள­துடன், எதிர்­வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­புக்கு தங்கள் முன்­மொ­ழி­வு­களை வழங்­கு­வ­தற்கு கால நீடிப்பு செய்­யப்­பட்­டுள்­ள­மை­யினால் வடமாகாணசபையின் முன்மொழி வுகளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவு செய்து மாகாணசபையில் எடுத்து விவாதித்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக முன்வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.