Breaking News

யாழில்‬ 7 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் பெண்ணொருவர் கைது

7 கிலோ கிராம்  தங்கக் கட்டிகளுடன் பெண் ஒருவர் சாவகச்சேரி, சங்கத்தானை இரயில் கடவையில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் 70 தங்கக்கட்டிகளுடன் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர். இதன்போது பெருந்தொகையான உள்நாட்டு வெளிநாட்டு பணங்களும் குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தங்கக்கட்டிகள் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு கடத்துவதறக்காக கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

இந்த தங்கம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் சென்று அங்கிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்தது.

மாதகல் பகுதியைச் சேர்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மணைவியே இவ்வாறு தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.