Breaking News

நாளை வரு­கிறார் அல்ஹுசைன்; கூட்­ட­மைப்­பையும் சந்­திப்பார்

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு நாளை சனிக்­கி­ழமை இலங்கை வரு­கிறார்.

சனிக்­கி­ழமை அதி­காலை இலங்கை வரும் செயிட் அல் ஹூசைன் எதிர்­வரும் 9 ஆம்­தி­கதி வரை நாட்டில் தங்­கி­யி­ருப்­ப­துடன் அரச தரப்பு, எதிர்த்­த­ரப்பு, சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் வட­மா­கா­ணத்­திற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

அத்­துடன் நாளை சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஐ.நா. மனித உரி­மை­யாளர் செயிட் அல் ஹூசைன் அங்கு வட­மா­காண முத­ல­மைச்­சரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை செயற்­பாட்டில் வட­மா­கா­ணத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக இருக்­கு­மென கரு­தப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே செயிட் அல் ஹூசைன் வட­மா­காண முதல்­வ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார்.

விசே­ட­மாக விசா­ரணை பொறி­மு­றையின் போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாடு எவ்­வாறு அமையும் என்­பது குறித்து இதன் போது கலந்­து­ரை­யா­டப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இதே­வேளை நாளை சனிக்­கி­ழமை மாலை கொழும்பு திரும்­ப­வுள்ள செயிட் அல் ஹூசைன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

அரச தரப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்­பின்­போது விசா­ரணைப் பொறி­முறை, நீதி­வ­ழங்கும் செயற்­பாடு, காணா­மல்­போனோர் விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

விசே­ட­மாக ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வாக எவ்­வாறு உள்­ளக விசா­ரணை வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென அர­சாங்க தரப்பில் செயிட் அல் ஹூசை­னுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த சந்­திப்­புக்­களை அடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் தமிழ் தேசியப் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வி­ருக்­கின்றார். இந்த சந்­திப்பின் போது உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை, அர­சியல் தீர்வு விட­யங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பங்­க­ளிப்பு எவ்­வாறு இருக்கும் என்­பது தொடர்பில் இதன் போது ஆரா­யப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அர­சாங்கம் விடுத்த உத்­தி­யோ­க­பூர்வ அழைப்­புக்கு அமை­வா­கவே ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். கடந்த செப்­டெம்பர் மாதம் ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரின் போது அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

அந்தப் பிரே­ர­ணையில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமைமீறல்கள், மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள், தொடர்பில் பொது­ந­ல­வாய வெளி­நாட்டு நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், வழக்­க­றி­ஞர்­களை கொண்டு விசா­ரணை நடத்­த­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது.

அத்­துடன் இந்தப் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பான வாய்­மூல அறிக்­கையை எதிர்­வரும் ஜூன் ­மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மன்றி பிரே­ரணை அமு­லாக்கம் தொடர்­பான எழுத்­து­மூல அறிக்­கையை அடுத்­த­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­க­வேண்­டு­மென பிரே­ரணை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது இவ்­வாறு இருக்க இலங்கை தொடர்பில் விசா­ரணை ஒன்றை முன்­னெ­டுத்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் கடந்த வருடம் அந்த அறிக்­கையை வெளி­யிட்­டது.

அந்த அறிக்­கையில் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கலப்பு நீதி­மன்­றத்தை அமைத்து சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பிர­சன்­னத்­துடன் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பின்னர் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் கலப்பு நீதி­மன்றம் என்ற விடயம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­துடன் உள்­ளக விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தாக வாக்­கு­று­தி­யையும் வழங்­கி­யது. எனினும் இதுவரை எவ்வாறான உள்ளக விசாரணையை முன்னெடுப்பது என அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

அதுமட்டுமன்றி உள்ளக விசாரணை பொறிமுறையில் வெ ளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இதுவரை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங் கைக்கு விஜயம் செய்கின்றார்.

இதற்கு முன்னர் கடந்த 2013ஆம் ஆண்டு முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றைமேற் கொண் டிருந்தமை குறிப் பிடத் தக்கதாகும்.