Breaking News

தீர்வு விடயத்தில் இந்தியா எம்முடன் இருக்கவேண்டும்! சு­ஷ்மாவிடம் வலியுறுத்துவோம்! என்கிறார் மாவை

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்தில் இந்­தியா முழு­மை­யாக எம்­முடன் இருக்­க­வேண்டும். இலங்கை கடற்­ப­ரப்­பிற்குள் அத்­து­மீறும் இந்­திய மீன­வரின் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பன தொடர்பில் இலங்கை வர­வுள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­துவோம் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

இலங்­கைக்கு இன்று வெள்­ளிக்­கி­ழமை வருகை தரும் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளை சனிக்­கி­ழமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சந்­தித்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­ட­வுள்ளார்.இக் கலந்­து­ரை­யா­டலில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்பில் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஆண்டு ஜன­வரி 8ஆம் திக­திக்குப் பின்­ன­ரான இலங்கை சூழலை இந்­தியா உட்­பட உலக நாடுகள் அவ­தா­னித்துக் கொண்டு வரு­கின்­றன. இவ்­வா­றான சூழலில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சரின் வருகை முக்­கி­ய­மா­ன­தாகும். அவ­ரு­டைய வரு­கை­யின்­போது நாம் ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை வலி­யு­றுத்­த­வுள்ளோம்.

குறிப்­பாக இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விட­யத்தில் இந்­தியா முழு­மை­யாக எம்­முடன் இருப்­பது தொடர்­பிலும் அவ­ரிடம் எடுத்­து­ரைப்போம்.

அத்­துடன் இலங்கை கடற்­ப­ரப்பில் அத்­து­மீறும் இந்­திய மீன­வரின் மீன்­பிடி நட­வ­டிக்கை தொடர்­பிலும் அதனால் எமது மீன­வர்கள் எதிர்­நோக்கும் சவால்கள், பிரச்­சி­னைகள் குறித்தும் அவ­ருக்கு எடுத்துக் கூறி அதற்­கான தீர்வை முன்­வைக்­கு­மாறும் கோர­வுள்ளோம்.

ஐ.நா. தீர்­மா­னத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய விட­யங்கள் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டுவோம். குறிப்­பாக மீள்­கு­டி­யேற்றம், இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பி­லுள்ள காணிகள் விடு­விப்பு, வாழ்­வா­தாரம் போன்­றவை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டுவோம். வடக்கு கிழக்குப் பகுதிகளின் தற்போதைய நிலவரங்கள் அபிவிருத்தியின் பின் தங்கிய நிலை தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என்றார்.