Breaking News

சபாநாயகர் கருவுக்கு கொலை அச்சுறுத்தல்

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை படு­கொலை செய்­யப்­போ­வ­தாக நேற்று முன்­தினம் தொலை­பே­சி­யூ­டாக கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட்­டு­வரும் 52 உறுப்­பி­னர்­க­ளைக்­கொண்ட கூட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக செயற்­ப­டு­வ­தற்கு அங்­கீ­காரம் அளிக்­கா­விட்டால் படு­கொலை செய்­வ­தா­கவே மேற்­படி தொலை­பேசி மிரட்­டலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய நேற்று பாரா­ளு­மன்­றத்தில் பகி­ரங்­க­மாக பிரஸ்­தா­பித்­தி­ருந்­த­துடன் சபை உறுப்­பி­னர்­களின் கவ­னத்­திற்கும் கொண்­டு­வந்­தி­ருந்தார்.

நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அமர்­வின்­போது மஹிந்த அணியின் பிர­தா­னி­யாக செயற்­பட்­டு­வரும் தினேஷ் குண­வர்த்த எம்.பி. தமது அணியை எதிர்க்­கட்­சி­யாக அங்­கீ­க­ரிக்கும் தீர்­மா­னத்தை அறி­விக்­கு­மாறு சபா­நா­ய­கரை வலி­யு­றுத்­தி­ய­துடன் மஹிந்த அணியின் ஆத­ர­வா­ளர்கள் அனை­வரும் சபை நடுவே கூடி ஆர்ப்­பாட்­டத்­தையும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர். இதனால் சபையில் கடும் சர்ச்சை நிலை நேற்று முன்­தினம் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நேற்­றைய தினம் சர்ச்நை நிலை ஏற்­பட்­ட­போது சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு தொலை­பேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் நேற்று தெரி­வித்தார்.

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அமர்­வின்­போது ஏற்­பட்­டி­ருந்த சர்ச்சை நிலைக்கு மத்­தியில் தனது கருத்­துக்­களை வெளி­யிட்ட சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தனக்கு தொலை­பேசி மூலம் கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்தார்.

தினேஷ் குண­வர்த்­தன எம்.பி தலை­மை­யி­லான "மஹிந்த" ஆத­ரவு அணிகள் பொது எதிர்க்­கட்­சி­யாக ஏற்றுக் கொண்டு சுயா­தீன குழுவில் பாரா­ளு­மன்­றத்தில் இயங்க அனு­மதி வழங்­கப்­பட வேண்­டு­மென சர்ச்சை நேற்று புதன்­கி­ழ­மையும் பாரா­ளு­மன்ற அமர்வில் எழுப்­பப்­பட்டு வாதப் பிரதி வாதங்கள் இடம்­பெற்­றன.

இதற்கு மத்­தியில் சபா­நா­யக்கர் கரு­ஜ­ய­சூ­ரிய சபையில் உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபா­நா­யகர் மேலும் இது தொடர்பில் கூறு­கையில் நேற்று (செவ்­வாய்­கி­ழமை) பாரா­ளு­மன்­றத்தில் இப் பிரச்­சினை எழுப்­பப்­பட்டு அமளி துமளி ஏற்­பட்­டது.

இதன் போது எனக்கு எதி­ரான அவ­தூ­றான வார்த்­தைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. ஆனால் நான் அவற்­றை­யெல்லாம் பெரி­தாக எடுத்துக் கொள்­ள­வில்லை. அன்­றைய தினம் செவ்­வாய்க்­கி­ழமை இரவு எனக்கு தொலை­பேசி மூலம் மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது.

இது எனக்கு மிகவும் வேத­னை­ய­ளித்­தது. இங்கு பாரா­ளு­மன்­றத்தில் உயர் அதி­கா­ரிகள் மற்றும் அதி­கா­ரிகள் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கட­மை­க­ளையே செய்­கின்­றனர்.அவர்கள் அர­சி­யல்­வா­திகள் அல்ல. ஏனவே அதி­கா­ரி­க­ளுக்கு மிரட்டல் விடுப்­பதும் பிழை­யான செய­லாகும் என்றும் சபா­நாய கர் கரு ஜய­சூ­ரிய சபையில் தெரிவித்தார்.

இதன் போது சபையில் உரையாற்றிய ஐக்கிய தேசிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி டலஸ் அழகப்பெரும, சபாநாயக்கருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதானது பாரதூரமானதாகும். எனவே இது தொடர்பில் வெளிப்படையாக விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது எம்மீது சுமத்தப்படும் என்றார்.