Breaking News

அர­சியல் தீர்வு குறித்து அடுத்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஆராய்வு

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வை எட்­டு­வது தொடர்­பிலும் நிறை­வேற்று அதி­கா­ர­மு­றை­மையை நீக்­கு­வது குறித்தும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பா­கவும் அடுத்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் பிர­தான இரண்டு கட்­சி­களும் கலந்­தா­லோ­சிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்­தி ரக் கட்சி தெரி­வித்­தது.

மனித உரி­மைகள் தொடர்­பி­லான பிரச்­சி­னைகள், மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள், தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டுதல் உள்­ளிட்ட அனைத்து பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கும் இந்தஆட்­சி­யி­லேயே தீர்வு எட்­டப்­ப­டு­மாயின் அதுவே எமது நல்­லாட்­சியின் அடை­யா­ள­மாகும்.அதற்­கான சகல முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தா­கவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மேற்­கொள்­வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தரப்பில் ஒன்­பது யோச­னை­களை கடந்த பாரா­ளு­மன்ற செய­ல­மர்வில் முன்­வைத்­தி­ருந்தோம். இந்த யோச­னை­களை ஐக்­கிய தேசியக் கட்சி பரி­சீ­லனை செய்து தமது தரப்பு தீர்­மா­னத்தை தெரி­விக்க வேண்டும் என குறிப்­பிட்­டி­ருந்தோம். அந்த நிலையில் நாம் கொண்­டு­வந்த அனைத்­தையும் பிர­தமர் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­று­கொள்­வ­தாக சபையில் சபா­நா­யகர் தெரி­வித்­துள்ளார்.

இதில் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் மேற்­கொள்­வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் யோச­னை­க­ளையும் அத்­தோடு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்­லாது செயற்­படும் உறுப்­பி­னர்­களின் கருத்தை ஆராயும் தினேஷ் குண­வர்­தன தலை­மை­யி­லான குழுவின் தீர்­மா­னத்­தையும் உள்­ள­டக்­கிய வகை­யி­லேயே இது உள்­ளது.

அதேபோல் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டட தொகு­தியில் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டனும் அதேபோல் பிற்­பகல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்பின் போதும் சாத­க­மான வகையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் பிர­தான பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் கடந்த காலத்தில் இருந்த சிக்­கல்கள் தீர்க்­கப்­பட்­டுள்­ளன. தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­திலும், அதி­கார பர­வ­லாக்கல் தொடர்­பிலும், தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வரும் திட்­டத்­திலும் ஆலோ­ச­னைகள் முன்­வைத்த நிலையில் எந்த கட்­சியும் இணக்­கப்­பாட்டை எட்­ட­வில்லை. பிர­தான கட்­சி­களில் ஏதா­வது ஒன்று முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்கும்.

மஹிந்த அர­சாங்­கத்தில் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் தெரி­வுக்­குழு அமைத்து பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்த போது மக்கள் விடு­தலை முன்­ன­ணியும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் முரண்­பட்டு நின்­றனர். அதேபோல் அதற்கு முன்­னரும் பல முரண்­பா­டுகள் இருந்­தன. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இந்த முரண்­பா­டுகள் இருந்து வந்­துள்­ளன. ஆனால் இப்­போது அவ்­வாறு அல்­லாது பிர­தான இரண்டு கட்­சி­களும் கலந்­து­ரை­யாடி பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டக்­கூ­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

ஆகவே அடுத்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து அர­சியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் அடுத்­த­கட்ட நட­வைக்­கை­களை மேற்­கொள்ளும் செயன்­மு­றைகள் தொடர்பில் ஆராய தயா­ராக உள்ளோம்.

அதன் பின்­னரே எவ்­வா­றான அர­சியல் வரைபை உரு­வாக்கப் போகின்றோம் என்ற தீர்­மானம் எட்­டப்­படும். எனினும் எமக்கு இப்­போது தேர்தல் திருத்தம் மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. அதன் அடிப்­ப­டையில் தான் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை குறைப்­பதா அல்­லது தக்­க­வைப்­பதா என்ற தீர்­மா­னத்தை எடுக்க முடியும் என நினை­கின்றோம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்த போதும் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­திற்கு வந்த போதும் அர­சியல் அமைப்பு திருத்தம் என்ற கார­ணத்தை தான் முன்­வைத்தோம். அதற்­கா­கவே மக்கள் வாக்­க­ளித்­தனர். ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் என்ற விட­யத்தை அனைத்து தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். ஆகவே தேர்தல் முறைமை மாற்­றத்தின் அடிப்­ப­டை­யி­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை மாற்­று­வதா இல்­லையா என்ற தீர்­மா­னத்தை எட்­ட­மு­டியும்.

ஜனா­தி­பதி முறை­மையின் அதி­கா­ரங்­களை குறைக்க முன்னர் பாரா­ளு­மன்ற அதி­கா­ரங்­களை அதி­க­ரிக்க வேண்டும். ஆகவே தேர்தல் முறைமை மூலம் வரும் விளை­வு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அடுத்­த­கட்ட தீர்­மானம் எடுக்­கப்­படும். அதே நிலையில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு என்ற விட­யத்தில் அர­சி­ய­ல­மைப்பு ரீதியில் தீர்வு ஒன்றை எட்ட முடி­யு­மாக இருந்தால் அதுவே பல­மாக அமையும். மீண்டும் பிர­பா­கரன் போன்ற எவரும் உரு­வாக எந்த வாய்ப்­பு­களும் அமை­யாது என நம்­பு­கின்றோம்.

ஆகவே இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு பிரதான இரண்டு கட்சிகளும் கலந்துரையாடி தீர்வை காண முடியும். இந்த பிரச்சினைகளை இந்த பாராளுமன்றத்தில் தீர்க்க வேண்டும். மனித உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட அனைத்து பிரதான பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படுமாயின் அதுவே எமது நல்லாட்சியின் அடையாளமாகும். ஆகவே இந்த அரசாங்கத்தில் அனைத்து பிரதான பிரச்சினைகளுக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்வு காணப்படும்.