Breaking News

விஜ­ய­க­லா­வுக்கு எதி­ராக பிர­தமர் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன? - விமல் கேள்வி

தமிழ்த் தேசிய கூட்­டமைப்­பி­னரை விட மிகவும் மோச­மான முறையில் இனக் குரோ­தத்தை தூண்டும் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நட­வ­டிக்கை ஏடுக்க வேண்டும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணி யின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார்.

மேற்­கு­லக நிகழ்ச்சி நிர­லுக்கு இலங்­கை யில் ஒரு­போதும் சந்­தர்ப்பம் அளிக்க போவ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற கூட்டு எதி­ர­ணியின் ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முர­ணா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை தவிர சர்­வ­தேச பொறி­மு­றைக்கு ஒரு போதும் சந்­தர்ப்பம் அளிக்க போவ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் சர்­வ­தேச ஊடகம் ஒன்­றுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால், இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யாளர் முற்­றிலும் மாறான கருத்­த­தையே தெரி­வித்­துள்ளார். சமஷ்டி முறை­யி­லான ஆட்சி நிர்­வாகம் உள்­ளக கட்­ட­மைப்­புகள் தொடர்பில் கருத்து தெரி­விக்க ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ருக்கு எவ்­வி­த­மான அதி­கா­ரமும் இல்லை. அரச வியூக கட்­ட­மைப்பை வேறு நாடு­க­ளுக்கு தீர்­மா­னிக்க சந்­தர்ப்பம் அளிக்க முடி­யாது.

ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான விஜ­ய­கலா மகேஸ்­வரன் அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் பாட­சாலை ஒன்றில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் தேசிய கொடியை ஏற்­று­வதை தவிர்த்து கொண்­டி­ருந்தார். தற்­போ­தைய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரா­கவும் அவர் உள்ளார்.

இந்த நிலையில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்­று­வ­தற்கு அவர் மறுப்பு தெரி­வித்­த­மையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட மோசமான நிலைப்பாட்டில் விஜயகலா உள்ளமை வெளிப்படுகினறது. இதற்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? என்றார்.