Breaking News

இந்தியாவுக்கு அதிர்ச்சி -இலங்கைக்கு இலகு வெற்றி

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது போட்­டியில் இலங்கை 5விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றுள்­ளது.

இந்­தியா இலங்கை அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடை­பெற்­றது. நாண­யச்­சு­ழற்­­சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்­த­டுப்பை தெரிவு செய்ய சொந்­த­மண்ணில் சாதிப்­ப­தற்கு கள­மி­றங்­கி­யது இந்தியா.

அறி­முக வேகப்­பந்து வீச்­சா­ள­ரான கசூன் ராஜித மற்றும் திஸ­ர­பெ­ரேரா ஆகியோர் பந்து வீச்சில் இந்­தி­யாவை திண­ற­டித்­தனர். முதல் ஓவரை வீசிய கசூன் ராஜித ஆரம்ப அதி­ர­டித்­து­டுப்­பாட்ட வீரர் ரோஹித் சர்மா இரண்­டா­வது பந்தில் ஓட்­ட­மெ­டுக்­காது ஆட்­ட­மி­ழக்க தொடர்ந்து ரஹானே(4) அரங்கு திரும்­பினார். அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து இந்­திய துடுப்­பாட்ட வீரர்கள் மீள்­வ­தற்குள் தவான்(9), ரெய்னா(20) யுவராஜ்(10) டோனி(2), பண்­டியா(2), ஜடேஜா(6) என அடுத்­த­டுத்து அரங்கு திரும்­பினர். சுழல்­பந்து வீச்­சாளர் அஸ்வின் மட்­டுமே 31 ஓட்­டங்­களை எடுத்தார். இறு­தியில் இந்­தியா 18.5 ஓவரில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 101 ஓட்­டங்­க­ளைப்­பெற்­றது.

இலங்கை சார்பில் ராஜித, சானக்க ஆகியோர் தலா மூன்று விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­ய­தோடு சமீர இரண்டு விக்­கெட்­டுக்­களை கைப்­பற்­றினார். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்­கையின் விக்­கெட்­டுக்கள் குறிப்­பிட்ட இடை­வெளியில் வீழ்த்­தப்­பட்­டாலும் 18ஆவது ஒவரில் 5 விக்­கெட்டு­களை மட்டும் இழந்து 105 ஓட்­டங்­களைப் பெற்று இல­கு­வெற்றி பெற்­றது இலங்கை.

அணித்­த­லைவர் தினேஷ் சந்­திமல் 35 ஓட்­டங்­க­ளையும் கபு­கெ­தர 25 ஓட்­டங்­க­ளையும் எடுத்து வெற்­றியை உறுதி செய்தனர். ஆட்டநாயகனாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ராஜித தெரிவானார். இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-–0 என இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.