மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின்னர் ஆயர் இல்லம் சென்ற வடமாகாண முதலமைச்சர் ஆயரை சந்தித்து நலம் விசாரித்தார்.