Breaking News

சேற்றில் விழுவதா? இல்லையா? நிராகரிக்கப்பட்டவர்கள் தீர்மானிக்க வேண்டும்

தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­டக் கூடிய, மக்­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்டவர்கள் எமது வேலைத்­திட்­டத்­திற்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கி நாட்டை முன்­னேற்­று­வதா? அல்­லது சேற்றுக் குழி­யி­லேயே மூழ்கி கிடந்து நாட்டை படு­பா­தா­ளத்தை நோக்கி தள்ளுவதா? என்­ப­தனை தீர்­மா­னிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்

சர்­வ­தே­சத்தின் பொரு­ளா­தாரம் சீர்­கு­லைந்து போனாலும் இலங்­கையின் பொரு­ளா­தாரம் சீரா­ன­தொரு நிலை­மைக்கு வரும் என்­ப­தனை சர்­வ­தேசம் ஒப்புக் கொண்­டுள்­ளது. ஆகவே நடப்­பாண்டில் இலங்கை பொரு­ளா­தாரம், அர­சியல் ,சமூக ரீதி­யாக பாரிய மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஓராண்டு பதவி பூர்த்­தியை முன்­னிட்டு தேசிய சபை என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்து ஒரு வருடம் பூரத்­தி­யா­கி­யுள்­ளது. இந்த ஓராண்டு பூர்த்­தி­யா­கின்ற தரு­ணத்தில் எமது ஆட்சி குறித்து பாராட்­டுக்கள் நிறைந்த வண்­ண­முள்­ளன. இருந்­த­போ­திலும் இந்த பாராட்­டுக்கள் எல்­லா­வற்­றிலும் பார்க்­கிலும் ஒரு வருட பூர்த்­தி­யாகும். இந்த தரு­ணத்தில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை பாராட்டி இரண்டு தர­மான அறிக்­கைகள் கிடைக்­க­பெற்­றன. இத்­த­கைய பாராட்டு அறிக்­கைகள் இரண்டும் வெளிநாட்டு பிர­தி­நி­தி­களின் வாயி­லாக கிடைக்­க­பெற்­றமை விசேட அம்­ச­மாகும்.

அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப்­புடன் நான் காரில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த போது தேசிய அர­சாங்கம் என்ற வேலைத்­திட்­டத்­திற்கு அவர் பெரும் பாராட்­டுக்­களை தெரி­வித்­தி­ருந்தார். இதன்­போது அர­சியல், பொரு­ளா­தார துறை­களில் பிராந்­திய ரீதி­யாக இலங்கை முன்­னிலை நாடாக பரி­ண­மிக்கும் என அவர் என்­னிடம் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­போன்று நேற்று முன் தினம் ஆரம்­பிக்­கப்­பட்ட பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்ட பொரு­ளா­தார வல்­லு­னர்கள் மற்றும் தலை­வர்­களும் இலங்­கையின் பய­ணத்தை வெகு­வாக பாராட்­டி­யி­ருந்­தனர். இந்த வரு­ட­மா­னது சர்­வ­தேச பொரு­ளா­தா­ரத்­திற்கு பெரும் பாதிப்­பாக அமைய கூடும். சர்­வ­தேச பொரு­ளா­தாரம் முழு­மை­யாக சீர்­கு­லைந்து போகும். என்­றாலும் இலங்கை பொரு­ளா­தார ரீதி­யாக ஸ்திர­மான நிலை­மையில் காணப்­படும் என தெரி­வித்­தி­ருந்­தனர். ஆகவே சர்­வ­தேச பிர­தி­நி­திகள் எம்­மீது அதீத நம்­பிக்கை கொண்­டுள்­ளனர். இந்த கூற்றின் பிர­காரம் இலங்­கை­யா­னது பொரு­ளா­தாரம், அர­சியல் ,சமூக ரீதி­யாக பாரிய மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாகும்.

தேசிய அர­சாங்கம் என்ற அடிப்­ப­டையில் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து மிகவும் துன்­ப­க­ர­மான கஷ்­ட­மான தரு­ணத்­திலும் கூட அனைத்து சவால்­க­ளையும் ஒழுங்கு முறை­மையின் பிர­காரம் முகங்­கொ­டுத்து அதனை வெற்­றக்­கொள்ள முடிந்­தது். ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை முழு நாட்டு மக்­களின் ஆத­ர­வு­ட­னேயே முன்­னெ­டுத்தோம். எமது மாற்­ற­மி­குந்த புரட்­சிக்கு வலது - இடது , பருத்­தி­துறை - தேவந்­தி­ர­முனை, கிராமம் -நகரம், தமிழ் ,முஸ்லிம் மற்றும் சிங்­களம் என்ற இன, மத பேதங்கள் பாராமல் அனை­வரும் பிரி­வி­னையை மறந்து புரட்­சியை வெற்றிக் கொள்­வ­றத்கு உதவி புரிந்­தனர். இதன்­பி­ர­காரம் அபா­ய­க­ர­மான புரட்­சியை அமை­தி­யா­கவும் ஜனா­நா­யக முறை­யிலும் வெற்றி கொண்டோம்.

ஜன­வரி 8 ஆம் திகதி புரட்­சியை சுமார் ஓராண்டு வரைக்கும் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்து வந்­துள்ளோம். நாம் ஆட்­சிப்­பீ­ட­மே­றி­யதன் பின்னர் சர்­தேச நாடு­க­ளுடன் சிறந்த நட்­பு­ற­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். தேசிய நல்­லி­ணக்­கத்தை பாது­காத்து அனைத்து இனத்­த­வர்­க­ளுக்­கு­மி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

நாட்டு மக்­க­ளுக்கு நாம் வழங்­கிய வாக்­கு­று­தி­களின் பிர­காரம் சட்ட ரீதி­யான சில திருத்­தங்­களே இனிமேல் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளன. இருந்­த­போ­திலும் குறித்த சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்­கான அனைத்து பணிகளும் தற்­போது நிறை­வ­டைந்த போதிலும் குறித்த சட்­ட­மூ­லங்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்து நிறை­வேற்ற மாத்­தி­ரமே உள்­ளது. இதன்­பி­ர­காரம் இது குறித்­தான சட்­டத்­தி­ருத்­தங்­களை நாம் விரைவில் நிறை­வேற்­ற­வுள்ளோம்.

அதே­போன்று புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்கும் வேலைத்­திட்­டத்­திற்கு நல்­லாட்சி அர­சாங்கம் கள­மி­றங்­கி­யுள்­ளது. குறித்த அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்கு் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­ற­வுள்ளோம். இத­னூ­டாக புதிய பாதையை நோக்கி நாம் பய­ணிக்­க­வுள்ளோம்.

எனினும் தேசிய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க கூடியவர்கள் அதிகளவில் காணப்பட்டாலும் எமக்கு எதிரானவர்களும் நாட்டில் உள்ளனர். இவர்கள் விடயத்தில் நாம் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படகூடியவர்கள் எமது வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டை முன்னேற்றுவதா அல்லது சேற்று குழியிலேயே மூழ்கி கிடந்து நாட்டை படுபாதாளத்தை நோக்கி முன்னகர்த்துவதா? என்பதனை முடிவு செய்ய வேண்டும் என்றார்.